Tuesday, December 30, 2014

விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ



விந்­த­ணுக்­களால் சக்­தி­யூட்­டப்­பட்ட உலகின் முத­லா­வது உயி­ரியல் ரோபோவை ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.
காந்­தத்தை பயன்­ப­டுத்தி தூர இயங்கும் முறைமை மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் நுண்­ணிய உலோக குழா­யினுள் எருது ஒன்றின் தனி­யொரு விந்­த­ணுவை உட்­செ­லுத்­தியே இந்த உயி­ரியல் ரோபோவை விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய ரெஸ்டென் நக­ரி­லுள்ள ஒருங்­கி­ணைப்பு நுண் விஞ்­ஞான நிறு­வ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான ஒலிவர் ஷமிட் விப­ரிக்­கையில், இந்த உயி­ரியல் ரோபோவை எதிர்­கா­லத்தில் உடலின் குறிப்­பிட்ட பகு­திக்கு மருந்­து­களை விநி­யோ­கிக்­கவும் கரு­முட்­டையை கருக்­கட்டச் செய்­யவும் பயன்­ப­டுத்த முடியும் என்று கூறினார்.

50 மைக்ரோன் நீளமும் 5 முதல் 8 மைக்ரோன் விட்­ட­மு­மு­டைய மேற்­படி நுண் உலோக குழாய் ஒரு விந்­த­ணுவை விடவும் சொற்ப அளவே பெரி­தாகும். இத்­த­கைய குழாய் கட்­ட­மைப்­புக்குள் விந்தணுவை உட்செலுத்த பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக ஒலிவர் கூறினார்.

No comments:

Post a Comment

Wel Come !!! computer express